விண்வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விண்வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 நவம்பர், 2010

வியப்பூட்டும் விண்வெளி-5 விண்வெளி வீரர்கள்

2008 நவம்பர் 14 முடிய 489 பேர் 39 நாடுகளில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்து உள்ளனர். இதில் 486 பேர் லோ எர்த் ஆர் பிட் (குறைந்த புவி ஈர்ப்பு விசை உள்ள சுற்று வட்டபாதை ) மற்றும் அதற்கு அப்பால் சென்று உள்ளனர் அதில் 24 பேர் சந்திரனின் சுற்று வட்ட பாதைக்கு சென்று உள்ளனர். 2008 முடிய விண் வெளியில் அதிக நாட்கள் இருந்தவர் செரிகி கே.கிரிகலிவ்(Sergei K.Krikalev)  இவர் விண் வெளியில் 803 நாட்கள் 9 மணி நேரம் 39ள் இருந்துள்ளார். பெகி.ஏ.விட்சன்(Peggy.A.Whitson) என்ற பெண்மணி அதிக பட்சமாக  377 நாட்கள் இருந்து உள்ளார்.

Astronaut  அஸ்ட்ராநாட் என்ற சொல்  astron (நட்சத்திரம்) மற்றும்  nautes  (பயணிப்பவர்) என்ற கிரேக்க சொற்களில் இருந்து உருவாக்கபட்டது.இந்த வார்த்தை 1930 இல் நெய்ல்ஸ் ஆர் ஜோன்ஸ் என்பவர் தனது நாவலில் முதல் முதலில் பயன்படுத்தினார் நாவலின் பெயர் தி டெத் ஹெட் மீட்டார். விண்வெளி வீரர்களை அமெரிக்கா- அஸ்ட்ராநாட் (Astronaut)  என்றும் ரஷ்யா-காஸ்மோநாட் (Cosmonaut) என்றும் சீனா மிடைகோநாட் (Taikonaut)  என்றும் அழைக்கின்றனர்.


முதன் முதலில் விண்வெளிக்கு சென்றவர் ரஷ்யநாட்டை சேர்ந்த யுரி காகரின் (Yuri  Gagarin)  இவர் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி விண்வெளிக்கு சென்று பூமியை வலம் வந்தார்.விண்வெளிக்கு சென்ற முதல் பெண் வீராங்கனை ரஷ்ய நாட்டை சேர்ந்த வாலின்டைனா டெரஸ்கோவா (Valentina Tereshkova) இவர் 1963 ம் ஆண்டு ஜுன் மாதம் விண்வெளிக்கு சென்றார். விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்கர் (உலகின் 2 வது விண் வெளிவீரர்) ஆலன் செப்பர்டு (Alan Shepard)   1961 ஆண்டு மே 5 ந்தேதி விண்வெளிக்கு சென்றார்.  விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க வீராங்கனை சாலிரைடு (Sallyride) இவர் 1983 ம் ஆண்டு ஜுன் மாதம் 18-ந்தேதி விண்வெளி பயணத்தை மேற் கொண்டார். மிக சிறு வயதில் விண்வெளி பயணத்தை மேற்கொண்டவர் கெர்மான்டிட்டோவ் (GhermanTitov) வயது 25.மிக அதிகவயதில் விண்வெளி பயணத்தை மேற் கொண்டவர் ஜான் கிளன் (John Glenn) வயது 77.


     1990 டிசமபர் மாதம் ஜப்பானை சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்து டோயோ ஹைரோ அக்யாமா (Toyo Hiro Akiyoma) என்பவரை விண்வெளிக்கு அனுப்பி அங்கு நிலவும் சூழ்நிலையை விவரிக்க கோரியது ஆனல் அவர் உடல் நலம் இன்றி விரைவிலேயே திரும்பி விட்டார். முதன் முதலில் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பயணி டென்னிஸ் டிட்டோ (Tennis Titto) இவர் 2001 ஏப்ரல் 28 அன்று ரஷ்ய விண்கலம் மூலம் சோயுஸ் டி எம் 3  மூலம் விண் வெளிக்கு பயணம் செய்தார்.
ஆண்டு தோறும் ஏப்ரல் 9  அஸ்ட்ராநாட் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர்களது தியாகம் தைரியம் கடின உழைப்பு நட்சத்திரங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இவற்றை நினைவு கூறும் வகையில்


முதன் முதலில் அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் 1959 இல் விண் வெளி வீரர்களை தேர்வு செய்தது. முதன் முதலில் ராணுவ ஜெட் விமானங்களை ஓட்டும் பயிற்சியும்,என்ஜினியரிங் பயிற்சியும் அவசிய தகுதிகளாக கருதப்பட்டது. முதலில் ராணுவத்தை சேர்ந்த விமானிகளுக்கு மட்டுமே விண்வெளி வீரர்களாகும் வாய்ப்பு அளிக்கபட்டது. அவர்களுக்கு 20 மாதம் பல துறைகளிலும் பயிற்சி அளிக்கபட்டது. அவர்களுடைய உயரம் 5 அடி 4 அங்குலத்தில் இருந்து 6 அடி 4 அங்குலத்திற்குள்ளாக இருக்க வேண்டும். அவர்களது பார்வைத்திறன் 20/20 என்ற அளவில் இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஜான் எப் கென்னடி விண்வெளி மையத்தில் விண்வெளி பயணத்தின் போது உயிர் இழந்த அமெரிக்க விண்வெளி வீரர்களை நினைவு கூறும் வகையில் Space mirror memorial  அமைக்கப்பட்டு ள்ளது.

சனி, 13 நவம்பர், 2010

வியப்பூட்டும் விண்வெளி-4 விண்வெளி சென்ற விலங்குகள்

விண்வெளிக்கு செல்வது தற்போது விருந்துக்கு செல்வது போல் அதிகரித்து வருகிறது.  ஆனால் 50 வருடங்களுக்கு முன்பு நிலைமை அவ்வாறு இருந்ததாக தெரியவில்லை.  எனவே மனிதன், பல வகையான விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பி வந்தான்.

 நாய், குரங்கு, முயல், எலி ஆகியவை இந்த விண்வெளி பயணத்தில் சென்று வந்த விலங்குகள் ஆகும்.  அந்த விலங்குகளில் ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்னும் நாய் குறிப்பிடத்தக்கது ஆகும்.  இது 1957 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஸ்புட்னிக் 2 என்ற விண்கலத்தில் அனுப்பப்பட்டது.  ஆனால் இந்த விண்கலம் திரும்பவும் பூமிக்கு வருவதற்கான வழிமுறைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் லைகாவின் வாழ்வு அத்தோடு முடிந்து போனது.  பின்னர் 1960, ஆகஸ்ட் 9ல் ஸ்டிரெல்கா மற்றும் பெல்கா என்ற இரு நாய்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

 மே 28, 1958ல் ஏபில் என்ற ரீசஸ் இன குரங்கும், பேக்கர் என்ற ஸ்குரில் இன குரங்கும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.  பின்னர் அவை இரண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வந்தன.  இதில் அனஸ்தீசியா பிரச்சனையால் ஏபில் ஆனது சில நாட்களில் சிகிச்சையளித்தும் இறந்து போனது.  இதற்கு முன் இதே போல் முதன்முதலாக ஆல்பர்ட் என்ற ரீசஸ் இன குரங்கு 1949 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஆனால் ஏபில் உடன் சென்ற பேக்கர் 27 வயது வரை வாழ்ந்து 1984ல் மறைந்தது.

 1959 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒட்வஷ்னயா மற்றும் ஸ்நெசின்கா என்னும் இரு நாய்கள் மற்றும் மர்ஃபுஷா என்ற முயல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.  இந்த முயல் லிட்டில் மார்த்தா என்றும் அழைக்கப்பட்டது.  இதில் வீரம் மிகுந்த என்ற பொருள் கொண்ட ஒட்வஷ்னயா ஐந்து முறை விண்ணில் பயணம் செய்து உள்ளது.  ஜனவரி 21, 1960ல் மிஸ். சாம் என்ற ரீசஸ் இன குரங்கு நாசா அமைப்பால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.  ஆகஸ்ட் 19, 1960ல் பயிற்சி பெற்ற இரு ரஷ்ய நாய்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பி வந்தன.  இதில் இன்னொரு விசயம் அவைகளோடு ஒரு முயல், 40 சுண்டெலிகள், இரண்டு எலிகள், பூச்சிகள் மற்றும் தாவரங்கள் ஆகியவையும் சேர்த்து அனுப்பப்பட்டன.

 சில நாட்களுக்குப் பின்னர் நாசா அமைப்பானது ஹாம் என்ற பெயரிடப்பட்ட சிம்பன்சி இன குரங்கு விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டது.  இது மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தது ஆகும்.  மணிக்கு 1500 மைல்கள் வேகத்தில் 42 மைல்கள் உயரத்திற்கு ஹாம் சென்றது.  உடலில் நீர் இழப்பு, லேசான மயக்கம் போன்றவற்றை தவிர அது பிரச்சனையின்றி நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது.  1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்சு நாடு பூனையை தன்னுடைய வெரோனிக் செயற்கைகோள் உதவியால் விண்வெளிக்கு அனுப்பியது.  நாசா அமைப்பானது குரங்குகள் விண்வெளியில் நீண்ட காலம் இருக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய முடிவெடுத்தது.  எனவே, 1985ல் பெயரிடப்படாத இரண்டு ஸ்குரில் இன குரங்குகள் மற்றும் 2 டஜன் அல்பினோ எலிகளையும் தன்னுடைய சேலஞ்சரில் அனுப்பியது.  அவை இரண்டும் பத்திரமாக திரும்பியது.

வியப்பூட்டும் விண்வெளி-3 விண்வெளிக்கு செல்வது

(Launch Vehicle) பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு லாஞ்ச் வெகிக்கிளிலும் நிலைகள் (Stages) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராக்கெட் பகுதிகள் இருக்கும்.
விண் பயணத்தில் புவி ஈர்ப்பு விசையை மீறி பயணிப்பது என்பது ஒரு பெரிய சவால் தான் ஒரு விண்கலம் ஒரு குறிப்பிட்ட இலக்கில், குறிப்பிட்ட வேகத்தில் விண்ணில் செலுத்தப்பட வேண்டும். விண்கலம் புவீ ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு செல்வதற்கு லாஞ்ச் வெகிக்கிள் (Launch Vehicle )பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு லாஞ்ச் வெகிக்கிளிலும் நிலைகள் (Stages) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராக்கெட் பகுதிகம் இருக்கும்

முதல் நிலை ராக்கெட் விண்கலம் பூமியின் மேற்பகுதியிலிருந்து மேல் எழும்புவதற்கு பயன்படும். இதற்கு இந்த நிலைக்கு தேவைபடும் உந்து சக்தி இந்த விண்கலம், லாஞ்ச் வெகிக்கிளின் எடைகளை விட அதிகமாக இருக்க வேண்டும். ராக்கெட்டில் உள்ள பூஸ்டர்கள் எரிபொருளை எரித்து வாயுக்களை வெளியிடுவதின் மூலம் இந்த உந்து சக்தியை தயாரிக்கின்றன.
  (Propellant) எனப்படும் சிறப்பு கலவையால் இயக்கபடுகின்றன இந்த கலவையில் திட அல்லது திரவ எரிபொரும், அந்த எரிபொரும் காற்று இல்லாத விண் வெளியில் எரிவதற்கு தேவையான ஆக்ஸிசனை தரக்கூடிய ஆக்சிடைசர் (Oxidizer) இரண்டும் கலந்ததாக இருக்கும். லாக்ஸ் (Lox) அல்லது திரவ ஆக்ஸிஜன் இதுவே அடிக்கடி பயன்படுத்தப்படும் ஆக்சிடைசர் (Oxidizer)புவிஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சுற்று வட்டபாதையில் விண்கலத்தை நிலைநிறுத்த தேவையான குறைந்த அளவு வெலாசிட்டி
(Velocity)க்கு ஆர்பிட்டல் வெலாசிட்டி என்று பெயர். 190 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு விண்கலத்தை சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த தேவையான ஆர்பிட்டல் வெலாசிட்டி 8 கிலோமீட்டர்/செகன்ட். வெளிப்படும் ஒரு குழியின் மேற்புறம் பொருத்தப்படும்.பிறகு புரோபெல்லன்ட் (Propellant) என்னும் சிறப்பு கலவி பிரத்யேக பைப்கள் மூலம் நிரப்பபடும். விண் வெளியில் ஏவப்படும் சமயத்தில் ராக்கெட்டின் முதல் நிலை என்ஜின்கள் இயக்கப்படும்.அப்பொழுது ஏற்படும் உந்து சக்தி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட்டுடன் கூடிய விண்வெளி கலத்தை மேலே கொண்டு செல்லும். அடுத்த 2ம் கட்ட என்ஜின்கள் இயங்க தொடங்கும் 2 அல்லது 3 நிமிடங்கம் பறந்த பிறகு பூஸ்டர்கம் விண் கலத்தில் இருந்து பிரிந்து பாராசூட்கம் மூலம் பூமியை வந்தடைந்து விடும் பிரதான என்ஜின் தொடர்ந்து எரிந்து விண் கலத்தை குறிப்பிட்ட சுற்று வட்ட பாதையில் கொண்டு நிலைநிறுத்தும்.
ராக்கெட்டின் என்ஜின்கள் புரோபெல்லன்ட்
பொதுவாக ராக்கெட் ஏவு மையங்களில் ராக்கெட் மற்றும் கார்கோ ஒரு டிரக் அல்லது டிராக்டர் மூலம் ராக்கெட் ஏவு தளத்திற்கு எடுத்து செல்லப்படும்.அந்த ராக்கெட் ஒரு தீச்சுவாலைகள் வெளிப்படும் ஒரு குழியின் மேற்புறம் பொருத்தப்படும்.பிறகு புரோபெல்லன்ட் (Propellant) என்னும் சிறப்பு கலவி பிரத்யேக பைப்கள் மூலம் நிரப்பபடும். விண் வெளியில் ஏவப்படும் சமயத்தில் ராக்கெட்டின் முதல் நிலை என்ஜின்கள் இயக்கப்படும்.அப்பொழுது ஏற்படும் உந்து சக்தி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட்டுடன் கூடிய விண்வெளி கலத்தை மேலே கொண்டு செல்லும். அடுத்த 2ம் கட்ட என்ஜின்கள் இயங்க தொடங்கும் 2 அல்லது 3 நிமிடங்கம் பறந்த பிறகு பூஸ்டர்கம் விண் கலத்தில் இருந்து பிரிந்து பாராசூட்கம் மூலம் பூமியை வந்தடைந்து விடும் பிரதான என்ஜின் தொடர்ந்து எரிந்து விண் கலத்தை குறிப்பிட்ட சுற்று வட்ட பாதையில் கொண்டு நிலைநிறுத்தும்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

விண்வெளி என்றால் என்ன?

விண்வெளி என்றால் என்ன? : விண் வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்ட தட்ட ஒரு வெற்றிடம் நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண் வெளியில் நடசத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.

விண்வெளியின் துவக்கம்: பூமியை சுற்றி உள்ள காற்றினால் வளி மண்டலம் உருவாக்கப்படுகிறது. பூமியில் இருந்து உயரே செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது. இந்த வளி மண்டலத்திற்கும் விண்வெளியின் வெளிப்பகுதிக்கும் ஒரு தெளிவான எல்லைக்கோடு என்பது இல்லை. ஆனால் பொதுவாக பூமியில் இருந்து 60 மைல்கள் (95 கீலோ மீட்டர்) உயரத்தில் இருந்து விண்வெளி தொடங்குவதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.வளி மண்டலத்திற்கு அடுத்து உள்ள விண்வெளி காலியாக இல்லை அங்கே சிறிது காற்று, விண்வெளி அசுத்தங்கம் மெட்ராய்ட்ஸ் (Meteoroids)    எனப்படும் விண் வெளிக்கற்கள்,பலதரப்பட்ட கதிர்வீச்சுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.ஆயிரகணக்கான விண்கலன்கள் அதாவது செயற்கை கோள்ள் இந்த பகுதிக்கு தான் செலுத்தப்படுகின்றன.

பூமியின் காந்த பகுதி  அதாவது பூமியை சுற்றி உள்ள பகுதியில் தான் காந்த சக்தி உணரப்படுகிறது. இந்த சக்தி வளி மண்டலத்தையும் தாண்டி விரவிக்கிடக்கிறது. இந்த காந்த மண்டலம் மின்னூட்டம் கொண்ட பொருட்களை விண்வெளியில் இருந்து ஈர்த்துக்கொள்கிறது. அதன் மூலம்
ஒரு கதிர் வீச்சு மண்டலம் உருவாகிறது அதற்கு வான் அலன் பெல்ட்(Van Allen belts)  என்று பெயர். பூமியின் காந்த மண்டலத்தில் மின்னூட்டம் பெற்ற பொருட்களை கட்டுபடுத்தும் விண்வெளி  பகுதிக்கு மெக்னடோஸ் பியர்ஸ் (Magnetosphere)    இது ஒரு கண்ணீர்த்துளி வடிவத்தில் இருக்கும்.அதனுடைய நுனி சந்திரனுக்கு எதிர்ப்புறம் அமைந்து இருக்கும். இந்த பகுதிக்கு அப்பால் பூமியின் காந்த மண்டலம் சூரிய சக்திக்கு கட்டு பட்டு போகிறது. இந்த தூரம் கூட பூமியின் புவீஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட தூரம் அல்ல பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் உயரம் வரைக்கும் இந்த புவீ ஈர்ப்பு விசை இருக்கும் அதனால்  விண் கலன்கள் பூமியின்  சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டிருக்கும்.கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தை  இன்டர் பிலானிட்டரி ஸ்பேஸ் (Interplanetary space)  என்று குறிப்பிடுகிறார்கள்.

சூரியனின் ஈர்ப்பு விசை கிரகங்களின் இயக்கத்தை கட்டுபடுத்துகிறது. அதனால் தான் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கு இடையே உள்ள தூரமும் சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிக அளவு இருக்கும் உதாரணமாக பூமி சூரியனில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சுற்றுகிறது. வீனஸ் கிரகம் 110 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சூரியனை சுற்றுகிறது.

இந்த வீனஸ் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது  பூமிக்கும் வீனஸ் கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் 40 மில்லியன் கிலோமீட்டர் . இந்த தூரம் பூமிக்கும் சந்திரனுக்கும் உம்ள தூரத்தை போன்று 100 மடங்கு அதிகமானது.

நட்சத்திரங்களுக்கு இடையே உள்ளதூரத்தை இண்டர் ஸ்ட்ல்லார் ஸ்பேஸ் (Interstellar space)  என குறிப்பிடுகிறார்கள் ஆனால் விண்வெளி ஆய்வாளர்கள் இந்த தூரத்தை கிலோமீட்டர் தூரத்தில் குறிப்பிடுவது இல்லை அதற்கு பதில் ஒளி ஆண்டுகளாக குறிப்பிடுகிறார்கள். (ஒரு ஓளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரமே ஒளி ஆண்டு எனப்படுகிறது.) ஒளி ஒரு வினாடியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 792 கிலோ மீட்டர் பயணிக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் உம்ள நடசத்திரத்தின் பெயர் பிராக்சிமா சென்டவுரி (Proxima Centauri)  இது சூரியனில் இருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது அதாவது 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நட்சத்திரங்களுக்கு இடையே பல தரப்பட்ட வாயுக்கள் மெல்லிய மேகங்கள் தப்பிசென்ற விண் கற்கள் மிக அதிகமான குளிர் தன்மையுடைய தூசுக்கள் முதலியவை மிதக்கின்றன. மேலும் பலப்பொருட்கள் இப்பகுதியில் கண்டறிப்படாமல் உள்ளன.
                                                                                                
                                                                                                            தொடரும்....

சனி, 4 செப்டம்பர், 2010

வியப்பூட்டும் விண்வெளி

.நா சபையின் 62 வது பொது சபை கூட்டம் 2009 ஆம் ஆண்டை உலக வானியல் ஆண்டாக அறிவித்து உள்ளது. மக்களிடையே வானியல் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிக அளவு மக்கம் வான்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஆண்டை வானியல் ஆண்டாக அறிவித்து உள்ளது.


பண்ணாட்டு வானியல் மையமும் (IAU INTERNATIONAL ASTRONOMICAL UNION) யுனஸ்கோ நிறுவனமும் இதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளன.
புகழ் பெற்ற வானியல் நிபுணர் கலீலியோ கலிலி விண்வெளி ஆய்வுக்காக டெலஸ் கோப் மூலம் ஆய்வை தொடங்கி 400 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது. அவருடைய ஆய்வு ஜுபிடர் கிரகத்தின் 4 முக்கியமான துணைக்கோள்கள்,சந்திரனில் உள்ள மலைகள் மற்றும் எரி மலைகள்

சூரிய புள்ளிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ள வழிவகை செய்தது.

கலீலியோ பயன்படுத்திய டெலஸ்கோப் தான் வானியலின்

இந்த 400 ஆண்டுகால வளர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய நிலையில் இந்த அண்டத்தையும், விண்வெளியையும் 24 மணி நேரமும் பார்த்து ஆராய

வானியல் துறை வளர்ச்சி அடைந்து உள்ளது. கலீலியோ பிறந்த நாடான இத்தாலி ஐ.நா சபையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தது.


மனிதன்,பூமி நிலவு,கிரகங்கள், சூரியன், மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது.



இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள், மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளபடுகின்றன.

விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. ஏனெனில் அன்றுதான் சோவியத் ரஷ்யா பூமியை சுற்றி வருவதற்காக தனது முதல் செயற்கை கோளான ஸ்புட்னிக்-1யை விண் வெளியில் ஏவியது.